பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்

பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததையடுத்து பாகிஸ்தான் மூத்த வீரரான சோயிப் மாலிக், ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்
Published on

இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின்  முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இருப்பதுபோல் வெளியானது.  இதனையடுத்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கும்,  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் கூறியதாவது:

மரியாதை குறைவான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாரையும் மோசமாக நடத்தக் கூடாது. அது சரியானதும் அல்ல. நாங்கள் ஓட்டலில் சாப்பிடும் காட்சியின் உண்மை தன்மையை யாரும் உணரவில்லை.

அந்த புகைப்படங்கள் 13ம் தேதி எடுக்கப்பட்டவை. போட்டிக்கு முன்தினம் நாங்கள் எங்கும் செல்லவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் நாட்டுக்காக விளையாடுகிறேன்.

இப்போது ரசிகர்கள் பேசுவதை கேட்டும், என்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பாக நான் விளக்கம் தருவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com