

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்துணவு திட்ட முட்டை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு எழுந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையாளரான சுதாதேவி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்களும் சிக்கின.
இந்த நிலையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் சிலைகளை தங்கத்தில் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் சுருட்டப்பட்டது அம்பலமானது.
இதனையடுத்து இந்து அறநிலைய துறையின் கூடுதல் ஆணையராக உயர் பதவியில் இருந்த கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தபட்டுள்ளது.