தண்ணீருக்கும் சுவை உண்டு: விஞ்ஞானிகள் தகவல்

‘தண்ணீர் சுவையற்ற திரவம்’ என்ற வாதம் இருந்த வந்தது. தற்போது தண்ணீருக்கும் சுவை உண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீருக்கும் சுவை உண்டு: விஞ்ஞானிகள் தகவல்
Published on

கலிபோர்னியா:

‘தண்ணீர் சுவையற்ற திரவம்’ என்ற வாதம் இருந்த வந்தது. தற்போது தண்ணீருக்கும் சுவை உண்டு. நாக்கில் உள்ள சுவை அறியும் செல்கள் தண்ணீரின் சிறப்பு சுவையை அறிய உதவுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்த ஆய்வு சுண்டெலிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பல தரப்பட்ட அதாவது இனிப்பு, உவர்ப்பு, கசப்பு, உப்பு, காரம் உள்ளிட்ட சுவைகளை வழங்கினர். முடிவில் தண்ணீர் வழங்கப்பட்டது.

அதை குடித்ததும் புத்துணர்வு அடைந்தன. தண்ணீரின் சுவையை அறிந்ததால் தான் அவற்றின் செயல்பாடுகள் தூண்டப்பட்டன. எனவே தண்ணீ ரின் சுவையை நாக்கில் உள்ள ‘செல்’களால் அறிய முடிகிறது என்றும் கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவன பேராசிரியர் யுகி ஒகாப் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com