

பாண்டா:
உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 வயது மாணவன் அர்பஜ் என்பவனை ஆசிரியர் ஜெய்ராஜ் கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தான்.
இது குறித்து மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் ஆசிரியர் ஜெய்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.