ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது: சரத்குமார் அறிவிப்பு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது என இன்று அறிவித்துள்ள நடிகர் சரத்குமார் வேறு யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Published on

சென்னை:

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் நிலையில் இந்த தேர்தலில் திடீர் வேட்பாளராக போட்டியிடும் நடிகர் விஷால் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இந்நிகையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது என இன்று மாலை அறிவித்துள்ள நடிகர் சரத்குமார் வேறு யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்காக கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com