

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், சமூக அக்கறையுடன் பல்வேறு மணல் சிற்பங்களை உருவாக்கி மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளார். மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தலைவர்களின் பிறந்தநாள், மறைவு, சாதனைகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை தனது கைவண்ணம் மூலம் மணல் சிற்பங்களாக பிரதிபலிக்கச் செய்கிறார் பட்நாயக்.