

கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள கைலாசம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி போதும்பொண்ணு. கணவன்-மனைவிக்கு
இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.