விரைவில் இந்தியா வரும் இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 கோர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. #samsunggalaxy #Smartphones
விரைவில் இந்தியா வரும் இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
Published on

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஜெ2 கோர் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முறையே SM-J260 மற்றும் SM-G8850 என்ற மாடல் நம்பர்களுடன் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் சிறப்பம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் மற்ற ஆன்ட்ராய்டு கோ சாதனங்கள் போன்று இல்லாமல், புதிய சாதனம் டச்விஸ் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 2600 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.


சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் சிறப்பம்சங்கள்:

கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் ஏற்கனவே பலமுறை இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. அதன்படி கிடைத்திருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ், 220x1080 பிக்சல் இன்ஃபைனைட் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7885 அல்லது ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com