பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சமீர் வர்மா காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்திய வீரர் சமீர் வர்மா ஜெர்மனி வீரரை 21-14, 16-21, 21-15 என வீழ்த்தி பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சமீர் வர்மா
சமீர் வர்மா
Published on

பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் பார்சிலோனா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா ஜெர்மனியைச் சேர்ந்த கெய் ஸ்கேஃபரை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 21-16 என சமீர் வர்மா கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 16-21 என இழந்தார். பின்னர் 3-வது செட்டில் சிறப்பாக விளையாடி அதை 21-15 எனக் கைப்பற்றினார். இதனால் 21-14, 16-21, 21-15 எனக் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com