மும்பை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சமீர் திக்கே விலகல்

மும்பை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து சமீர் திக்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #MCA
மும்பை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சமீர் திக்கே விலகல்
Published on
இந்தியாவின் தலைசிறந்த உள்ளூர் அணிகளில் ஒன்று மும்பை. ரஞ்சி டிராபி தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணி கீப்பரான சமீர் திக்கே இருந்து வந்தார். ஒரு சீசன் மட்டுமே பணிபுரிந்த இவர், தனது சொந்த வேலைக் காரணமாக பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



இந்திய அணிக்காக 6 டெஸ்ட் மற்றும் 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சமீர் திக்கே ஒப்பந்தம் குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் கூறுகையில் ‘‘நாங்கள் அவருடன் ஒரு வருடத்திற்குதான் ஒப்பந்தம் போட்டிருந்தோம். அவரிடம் பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டோம். ஆனால், குடும்ப சூழ்நிலைக் காரணமாக நீட்டிக்க விரும்பவில்லை என்றார். நாங்கள் விரைவில் புதிய பயிற்சியாளரை நியமிக்க இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com