ஓய்வு பெறும் கடைசி போட்டியில் அபராதம் பெற்ற தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லரை தகாத வார்த்தைகளால் திட்டிய பிலாண்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிலாண்டர்
பிலாண்டர்
Published on

தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

ஜோஸ் பட்லரை அவுட்டாக்கும்போது பிலாண்டர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் அவருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் கடைசி ஆட்டத்தில் அபராதத்துடன் வெளியேறுகிறார் பிலாண்டர்.

இந்தத் தொடரில் ஏற்கனவே பிலாண்டரை ஜோஸ் பட்லர் திட்டியிருந்தார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல் பென் ஸ்டோக்ஸ், ரபடா ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com