பஞ்சாப் ரெயில் விபத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்

பஞ்சாப் ரெயில் விபத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்

பஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். #AmritsarTrainAccident
Published on

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சவுர பஜார் பகுதியில் நேற்று இரவு தசரா விழா கோலகமால கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியின் போது, எதிர்ப்பாராதவிதமாக ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்துக்கு  பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் மாநில முதல்மந்திரி அம்ரிந்தர் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com