

ஆஸ்லோ:
ரஷ்யாவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று நார்வேயிலிருந்து நேற்று புறப்பட்டுச் சென்ற போது திடீரென பழுது ஏற்பட்டு ஆர்ட்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் 8 பேர் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடலில் விழுந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இருப்பினும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை கண்டறிய முடியவில்லை. இதனால், 8 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.