பிரிட்டன் நாட்டுக்கான இந்திய உயர் தூதராக ருச்சி கனஷியாம் நியமனம்

பிரிட்டன் நாட்டுக்கான இந்திய உயர் தூதராக ருச்சி கனஷியாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #RuchiGhanashyam
பிரிட்டன் நாட்டுக்கான இந்திய உயர் தூதராக ருச்சி கனஷியாம் நியமனம்
Published on

புதுடெல்லி:

லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் நாட்டுக்கான இந்திய உயர் தூதராக ஒய்.கே.சின்ஹா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் புதிய உயர் தூதராக ருச்சி கனஷியாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1982-ம் ஆண்டில் இந்திய அயல்நாட்டுப் பணி கல்வியில் தேர்ச்சி பெற்ற ருச்சி கனஷியாம் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் மேற்கத்திய நாடுகள் விவாகரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

விரைவில் லண்டன் செல்லும் இவர் ஒய்.கே.சின்ஹாவிடம் இருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #RuchiGhanashyam #HighCommissionerofIndia #UKHighCommissionerofIndia

X

Maalai Malar
www.maalaimalar.com