

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பகுதி யாருக்கு சொந்தம்? என்ற பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகளில் ஒன்றான இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 1994-ல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மசூதிகள் முஸ்லிம் மதத்துடன் ஒருங்கிணைந்த இடங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.