சுயதொழில் தொடங்க மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.70 லட்சம் கடனுதவி

சுயதொழில் தொடங்க 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 70 லட்சம் கடன் உதவியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
சுயதொழில் தொடங்க மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.70 லட்சம் கடனுதவி
Published on

புதுச்சேரி:

புதுவை அரசின் மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் சேர்ந்த மாற்றுதிறனாளிகள் சுய தொழில் தொடங்கும் விதமாக கடன் உதவி வழங்கும் விழா சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது.

81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 70 லட்சம் கடன் உதவியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா, தனவேலு, பாஸ்கர், தீப்பாய்ந்தான், விஜயவேணி, எம்.என்.ஆர். பாலன் மற்றும் மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழக தலைவர் ஆலிஸ்வாஸ், மேலாண் இயக்குனர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com