குமரி மாவட்டத்தில் இதுவரை பறக்கும்படை சோதனையில் ரூ.58¾ லட்சம் பறிமுதல்

குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.58 லட்சத்து 86 ஆயிரத்து 655 ரொக்கப்பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். #ParliamentaryElections
குமரி மாவட்டத்தில் இதுவரை பறக்கும்படை சோதனையில் ரூ.58¾ லட்சம் பறிமுதல்
Published on

நாகர்கோவில்:

பாராளுமன்ற தேர்தலை அடுத்து நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் நேற்று வரை 40 லட்சத்து 8 ஆயிரம் ரொக்கப்பணமும், 4 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ரூ.5 லட்சம் ரொக்கப்பணமும், 6 மதுபான பாட்டில்களும் சிக்கி உள்ளது. பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.9 லட்சத்து 24 ஆயிரத்து 785 ரொக்கப்பணமும், சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்க கொண்டு சென்ற 11 மிக்சியும், 8 கார்களும், ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பத்மநாபபுரம் தொகுதியில் நேற்று இரவு நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 900-மும், மற்றொரு இடத்தில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கிள்ளியூர் தொகுதியில் ரூ.77 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.58 லட்சத்து 86 ஆயிரத்து 655 ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

நாகர்கோவில், களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி பகுதிகளில் இன்று காலையிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #ParliamentaryElections

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com