

பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை வரை நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 34 கோடியே 69 லட்சத்து 7 ஆயிரத்து 954 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுதவிர 1 கோடியே 77 லட்சம் மதிப்பீலான 7 கிலோ 74 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 424 தேர்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. சுவர் விளம்பரம் செய்ததாக 12 ஆயித்து 537 வழக்குகளும், போஸ்டர் ஒட்டியதாக 17 ஆயிரத்து 693 வழக்குகளும், பேனர் கட்டியதாக 7 ஆயிரத்து 711 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.