ஆலங்குளம் அருகே குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
ஆலங்குளம் அருகே குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
Published on

கடையம்:

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குட்டி என்ற கவுளிகுமார் (வயது 35). இவருக்கு மேலகுத்தப்பாஞ்சான் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் மனைவியின் ஊரில் வசித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு மற்றும் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.  

இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார்  பரிந்துரையில், மாவட்ட கலெக்டர்  ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் பாளை சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com