கொள்ளையன் நாதுராமை சுட்டு பிடிக்க முடிவு: ராஜஸ்தானில் அதிரடி வேட்டை

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய கொள்ளையன் நாதுராமை சுட்டுப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையன் நாதுராமை சுட்டு பிடிக்க முடிவு: ராஜஸ்தானில் அதிரடி வேட்டை
Published on

சென்னை:

ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய கொள்ளையன் நாதுராம் கூட்டாளிகளுடன் தப்பி சென்று விட்டார்.

அவருக்கு மஞ்சு என்ற மனைவியும், திவ்யா என்ற காதலியும் உள்ளனர். அவர்களுடன் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை வைத்து நாதுராம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

தப்பி ஓடி அவரை சுட்டுப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக நாதுராமின் உறவினர்கள் சிலரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com