ஆர்.கே.நகர் தேர்தல் தேதி: தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி டெல்லி பயணம்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 31-ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த டெல்லி செல்கிறார்.
ஆர்.கே.நகர் தேர்தல் தேதி: தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி டெல்லி பயணம்
Published on

ஜெயலலிதா மறைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டிசம்பர் 31-ந்தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் போலி வாக்காளர்களை நீக்கியபிறகே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர் என்று தேர்தல் ஆணையம் கூறியதைடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அத்துடன், ஏற்கனவே உத்தரவிட்டபடி டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com