இளவரசர் மீது கொலைபழி - அமெரிக்காவுக்கு சவுதி அரசு கண்டனம்

துருக்கி நாட்டில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. #KhashoggiMurder #SaudiCrownPrince
இளவரசர் மீது கொலைபழி - அமெரிக்காவுக்கு சவுதி அரசு கண்டனம்
Published on

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்தில்  பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

மேலும், ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து சவுதி அரேபியா போர் ஆயுதங்கள் கொள்முதல் செய்வதையும் எதிர்த்து அமெரிக்கா அந்த தீர்மானத்தில் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com