

இந்த தொடரில் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனே அணிதான் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் தொடரை தோல்வியுடன் தொடங்கினோம். எங்களுடைய தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியை பெற நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனே அணிதான்.
அந்த அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, எப்படி தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்று ஆராய்ந்தோம். அதன்பிறகு தொடர்ந்து முன்னேறினோம். சில போட்டிகளில் நெருங்கி வந்து வெற்றி பெற்றோம். மீண்டும் தொடரின் மத்தியில் புனே அணிதான் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்தது.