வாழப்பாடியில் ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் தீ விபத்து

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் மின் கசிவால் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்து பொருட்களை மீட்டனர்.
வாழப்பாடியில் ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் தீ விபத்து
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி அய்யாக்கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ஆசிரியை சுலோச்சனா. அரசுப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவரது வீட்டில் நேற்று பகல் 12 மணியளவில், தண்ணீர் சுட வைப்பதற்காக ஹீட்டர் போட்டுள்ளனர். 

அதிக மின் அழுத்தத்தால் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றிக் கொண்டது. அந்த தீ விபத்தில், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. 

அது குறித்து தகவலறிந்த வாழப்பாடி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து, வீட்டில் இருந்த மற்ற பொருட்களை காப்பாற்றினர். மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com