சிகாகோ செல்ல அனுமதி மறுத்ததாக மம்தா தெரிவித்த கருத்து உண்மையல்ல - வெளியுறவு துறை

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சிகாகோ செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்த கருத்து உண்மையல்ல என வெளியுறவு துறை அறிவித்துள்ளது. #MamataBanarjee #Chicago #MEA
சிகாகோ செல்ல அனுமதி மறுத்ததாக மம்தா தெரிவித்த கருத்து உண்மையல்ல - வெளியுறவு துறை
Published on

புதுடெல்லி:

சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று உரையாற்றி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பேலூர் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எனது சிகாகோ பயணம் ரத்து செய்யப்பட்டதில் மத்திய அரசின் சதி அடங்கியிருக்கிறது என தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சிகாகோ செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்த கருத்து உண்மையல்ல என வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வெளியுறவு துறை செயலாளர் ரவீஷ்குமார் கூறுகையில், மம்தா பானர்ஜியிடம் இருந்து சிகாகோ செல்வதற்கான எந்த வேண்டுகோளையும் பெறவில்லை. அவர் சிகாகோ செல்ல  அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என மறுப்பு தெரிவித்துள்ளார். #MamataBanarjee #Chicago #MEA

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com