

குறிப்பாக பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்தது. இந்த போட்டி வருகிற சனிக்கிழமை (23-ந்தேதி) நடக்கிறது. பார்சிலோனா- ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்று இதை ரசிகர்கள் பார்ப்பதில்லை. மெஸ்சி - கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இடையிலான போட்டி என்றுதான் பார்ப்பார்கள்.
இந்த போட்டிக்காக இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரொனால்டோ இன்று காலை பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் எல் கிளாசிகோ போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.