இந்திய அணிக்காக விளையாட தயார்- இளம் சிங்கம் ஷுப்மான் கில் சொல்கிறார்

உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மான் கில் இந்திய அணிக்காக விளையாட தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். #TeamIndia
இந்திய அணிக்காக விளையாட தயார்- இளம் சிங்கம் ஷுப்மான் கில் சொல்கிறார்
Published on

மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடும் ஷுப்மான் கில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடினார்.

அதன்பின் உள்ளூர் தொடர்களில் பங்கேற்று அசத்தி வருகிறது. தற்போது தியோதர் டிராபி நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. இந்தியா ‘சி’ அணிக்காக விளையாடி வரும் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

இதனால் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இந்திய அணியில் விளையாடுவது குறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘நான் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com