ஹோலி பண்டிகை கொண்டாட மாட்டேன் - ராஜ்நாத் சிங்

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சோகம் இன்னும் நீங்காத நிலையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட போவதில்லை என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #Holi #PulwamaAttack
ஹோலி பண்டிகை கொண்டாட மாட்டேன் - ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சோகம் இன்னும் நீங்காத நிலையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட போவதில்லை என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2017-ம் ஆண்டில் சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டபோது, ராஜ்நாத் சிங் ஹோலி பண்டிகையை கொண்டாடவில்லை என்பது நினைவிருக்கலாம். #RajnathSingh #Holi #PulwamaAttack

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com