ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி:

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களில் ஒருவர் பேரறிவாளன்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு பின்னணியில் உள்ள மிகப்பெரிய சதியை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்பு குழு அதன் விசாரணையை முடிக்காமல் தாமதமாக செயல்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன என்று சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பான மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு வருகிற 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com