நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை - அரசியல் களத்தில் ரஜினி வேகம்

நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதால் புதிய கட்சி தொடங்குவதில் தீவிரமாகி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை - அரசியல் களத்தில் ரஜினி வேகம்
Published on

சென்னை:

ரஜினி உண்மையிலேயே அரசியல் களத்துக்குள் வந்து விட்டாரா? அல்லது காலா படத்துக்காக பாவ்லா காட்டுகிறாரா? என்பது போன்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கின்றன.

இதனையெல்லாம் மனதில் வைத்துதான் காலா படப்பாடல் வெளியீட்டு விழாவில் யார் என்ன சொன்னாலும் நான் பின் வாங்கமாட்டேன் என்று எங்கள் தலைவர் பேசினார் என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் கடந்த 4 மாதங்களாக நடந்து முடிந்துள்ளது. உறுப்பினர் சேர்க்கையும் அசுர வேகத்தில் நடக்கிறது. கட்சியை தொடங்க வேண்டியது மட்டும்தான் பாக்கி என்பதும் ரஜினி மக்கள் மன்றத்தினரின் குரலாக ஒலிக்கிறது.

இதற்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரஜினி தனது பேச்சில் புலிப்பாய்ச்சலை வெளிப்படுத்தினார்.

நான் அரசியலுக்கு வந்துள்ளதை பலர் ஏளனம் செய்கிறார்கள். என்னாலும் எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை தர முடியும் என்று பொங்கினார்.

இதன் பின்னர் அவரது இமயமலை பயணமும் அப்போது அரசியல் பேசாமல் தவிர்த்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் கடந்த 9-ந்தேதி நடந்த காலா விழா ரஜினியின் அரசியல் வேகத்துக்கு மீண்டும் அடித்தளம் அமைத்துள்ளது என்றே கூறலாம்.

ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்கவில்லை. இப்படி நம்மை சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காமல் செல்ல வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என்றே ரஜினி எங்களிடம் அறிவுறுத்தி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணியினரின் ஆலோசனைக்கு பின்னர் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ள ரஜினி பெண்களின் ஓட்டுகளை கவரவும் திட்டமிட்டுள்ளார்.

இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்க உள்ள ரஜினி தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com