ராஜபாளையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் ஆவரம்பட்டியில் உள்ள அரசுபோக்குவரத்தக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்தக்கழக தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராஜபாளையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் ஆவரம்பட்டியில் உள்ள அரசுபோக்குவரத்தக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்தக்கழக தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் திருவேட்டை போத்தி(எல். பி.எப்), சன்னாசி (சி.ஐ.டி.யு). தர்மசாஸ்தா-(ஏ.ஐ.டி.யு.சி).காளிமுத்து(பி.டி.எல்.எப்), ராமசாமி (டி.டி.எஸ்.எப்), முத்துராஜ்(தே.மு. தி.க) சக்திவேல் (சாலை பாதுகாப்பு), திருப்பதி (டி.டி.யு.சி), ரமேஷ் குமார்(வி.சி.க)ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்களின குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களின் சம்பளம் பிடித்த பணம் ரூ. 7 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கக் கோரியும், தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளன்றே பென்சன் தொகை முழுவதையும் வழங்கக் கோரியும், ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக நடத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஜ.டி.யு மாவட்டத் துணைத்தலைவர் கணேசன் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com