

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளைமறுதினம் (நவ.7-ந்தேதி) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.
தென்மேற்கு பருவமழைக் காலம் முடிவடைந்து விட்டதால் தற்போது கேரளாவில் மழை சீசன் இல்லை. என்றாலும் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யலாம் என வானிமை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மைதானம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் போட்டி நடப்பது சந்தேகம்தான்.
இருந்தாலும், மைதானத்தில் தண்ணீர் வடிகால் சிறப்பான வகையில் உள்ளதால், மழை நின்றவுடன் மைதானம் போட்டிக்கு தயாராகிவிடும் என்று மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.