தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தை தணித்த கோடை மழை- குன்னூரில் இடி தாக்கி 12 பேர் காயம்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இன்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குன்னூரில் இடி தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர். #TamilNaduRains #Rainfall #IMD
தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தை தணித்த கோடை மழை- குன்னூரில் இடி தாக்கி 12 பேர் காயம்
Published on

சென்னை:

தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. விட்டுவிட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. 

விருதுநகர், சாத்தூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.  தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் இடி தாக்கியதில் கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால், அந்த கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், போலீசார் 16 மணிநேர போராட்டத்திற்கு பின், அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #TamilNaduRains #Rainfall #IMD

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com