ரெயில் கழிவறை பைப் தண்ணீரில் டீ தயாரித்த புகார் - கேண்டீன் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ரெயில் கழிவறைக்குள் உள்ள பைப்பில் இருந்து டீ தயாரிக்க தண்ணீர் எடுத்தது தொடர்பாக வீடியோ பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #IndianRailways #TrainToilet
ரெயில் கழிவறை பைப் தண்ணீரில் டீ தயாரித்த புகார் - கேண்டீன் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
Published on

ரெயில் பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த ரெயில்வே கேண்டீன் ஊழியர் ஒருவர் ரெயில் கழிவறையில் இருந்து டீ கேன்களில் தண்ணீர் பிடித்து ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்கிறார். அவற்றை வாசலில் நின்ற மற்றொரு ஊழியர் பெறுகிறார்.

இதன்மூலம் கழிவறையில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடித்து டீ தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இனி ரெயிலில் யாராவது டீ குடிப்பார்களா? என்ற கேள்வியும் சமூக வலைத்தங்களில் பரவத் தொடங்கியது. பலர் ரெயில்வே அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com