அமெரிக்க நிகழ்ச்சிகளை ரத்துசெய்து விட்டு பியுஷ் கோயல் இந்தியா திரும்புகிறார்

அமெரிக்கா சென்றுள்ள ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், பஞ்சாப் ரெயில் விபத்து குறித்து அறிந்து இந்தியா திரும்புகிறார். AmritsarTrainAccident #PiyushGoyal
அமெரிக்க நிகழ்ச்சிகளை ரத்துசெய்து விட்டு பியுஷ் கோயல் இந்தியா திரும்புகிறார்
Published on

புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் நேற்று 50க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 70க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு ப்ணிகள் நடைபெற்று வருகின்றன

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், பஞ்சாப் ரெயில் விபத்து பற்றி அறிந்தவுடன், அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இந்தியா விரைகிறார்.

பஞ்சாப் ரெயில் விபத்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பஞ்சாப் ரெயில் விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். #AmritsarTrainAccident #PiyushGoyal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com