எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை - ராம்விலாஸ் பஸ்வான்

ஜார்க்கண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். #RamvilasPaswan #RahulGandhi
எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை - ராம்விலாஸ் பஸ்வான்
Published on

ராஞ்சி:

மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டணியை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை ஓரணியில் திரள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், இந்த கூட்டணி நீடிக்குமா என தெரியவில்லை. வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளை பிரிப்பதில் எத்தனை இழுபறி நிலவும் என்பது அப்போது தெரிய வரும்.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான். அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக நிச்சயம் ஆட்சியமைக்கும். பிரதமராக நரேந்திர மோடி நிச்சயம் மீண்டும் ஆட்சியை தொடர்வார் என்றார். #RamvilasPaswan #RahulGandhi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com