

அப்போது 10 மாதங்கள் பிசிசிஐ-யில் பணி செய்துவிட்டு, இரண்டு மாதங்கள் ஐ.பி.எல். அணியான டெல்லி டேர்டெவில்ஸ்-க்கு ஆலோசகராக செயல்பட்டார். இப்படி பதவி வகிப்பது ‘இரட்டை ஆதாயம் பெறுதல்’ விதிமுறைக்கு உட்பட்டது என விமர்சனம் எழும்பியது.
மேலும், இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் டிராவிட் விரும்ப நினைத்தால், இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்திற்கு உட்பட வேண்டும் என்று கூறப்பட்டது.