உலக பேட்மிண்டன் பைனல்ஸ்: பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்

சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். #PVSindhu
உலக பேட்மிண்டன் பைனல்ஸ்: பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்
Published on

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிவி சிந்து, நொசோமி ஒகுஹாரா ஆகியோர் முன்னேறினார்கள்.

இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பிவி சிந்து 21-19, 21-17 என ஒகுஹாராவை வீழ்த்தி முதன்முறையாக உலக பேட்மிண்டன் பைனல்ஸ் கோப்பையை கைப்பற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com