தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து

பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #PVSindhu
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து
Published on

பிவி சிந்துவிற்கு கிரிகோரியா மரிஸ்கா முதல் செட்டில் கடும் நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் சமாளித்து விளையாடிய பிவி சிந்து 23-21 எனக்கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 16-21 என இழந்தார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் பிவி சிந்து ஆக்ரோசத்துடன் விளையாடினார். முதல் இரண்டு செட்டில் ஈடுகொடுத்த கிரிகோரியா மரிஸ்காவால் 3-வது செட்டில் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 21-9 என எளிதில் கைப்பற்றி பிவி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com