புஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கவுன்ட்டி கிரிக்கெட் அணி

கொரோனா வைரஸ் காரணமாக மே 28-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் புஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது க்ளோசெஸ்டர்ஷைர்.
புஜாரா
புஜாரா
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. இவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு போட்டியில்லாத போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுவது வழக்கம். ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும்.

இந்த காலக்கட்டத்தில் அவர் இங்கிலாந்து சென்று விளையாடுவார். க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி அணி புஜாராவை விளையாட ஒப்பந்தம் செய்திருந்தது.

தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உச்சத்தில் உள்ளது. இதனால் மே 28-ந்தேதி வரை எந்தவொரு போட்டியையும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புஜாரா உடனான ஒப்பந்தத்தை க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி அணி ரத்து செய்துள்ளது. க்ளோசெஸ்டர்ஷைர் அணிக்காக புஜாரா ஆறு போட்டிகளில் விளையாட இருந்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com