புதுக்கோட்டை மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை

கடலில் பிடிக்கப்படும் மீன்கள் கெட்டு போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் ஐஸ் பார்கள் தேவையான அளவு கிடைக்காததால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
புதுக்கோட்டை மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன.

இங்கிருந்து விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுவிட்டு நேற்று காலை கரை திரும்பினர். மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள், நண்டுகள் சிக்கின.

கடலில் பிடிக்கப்படும் மீன்கள் கெட்டு போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் ஐஸ் பார்கள் தேவையான அளவு கிடைக்காததால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒருமுறை மட்டும்தான் கடலுக்கு சென்று வந்துள்ளோம்.

மீண்டும் கடலுக்கு சென்று பிடிக்கும் மீன்கள் கெட்டுப்போகாமல் வைப்பதற்கு பயன்படுத்தும் ஐஸ் பார்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை.

தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாலும், அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும் ஐஸ் பார்களை தயார் செய்ய முடியவில்லை. இதனால், கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com