புனித ரமலான் நோன்பு கஞ்சி வழங்க சலுகை விலையில் பச்சரிசி- புதுக்கோட்டை கலெக்டர் அறிவிப்பு

புனித ரமலான் நோன்பிற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 88 பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் 1,21,330 கிலோ பச்சரிசி அரசால் சலுகை விலையில் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் நோன்பு கஞ்சி வழங்க சலுகை விலையில் பச்சரிசி- புதுக்கோட்டை கலெக்டர் அறிவிப்பு
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் புனித ரமலான் நோன்பிற்காக ஒவ்வொரு வருடமும் நோன்பு கஞ்சி வழங்க பள்ளி வாசல்களுக்கு அரசால் சலுகை விலையில் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல நடப்பாண்டும் தொடங்க உள்ள புனித ரமலான் நோன்பிற்காக நேற்று 5-ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 88 பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் 1,21,330 கிலோ பச்சரிசி அரசால் சலுகை விலையில் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை நோன்பு கஞ்சிக்காக அரிசி கோரி விண்ணப்பிக்காத பள்ளி வாசல் நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் விண்ணப்பித்து அரசால் வழங்கப்படும் சலுகை விலை அரிசியினை பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com