புதுவை பல்கலைக் கழக நூலகர் விஜயகுமார்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
புதுவை பல்கலைக் கழக நூலகர் விஜயகுமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

உலக புத்தக தினம்

மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது,மாணவர்களின் முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு என்னும் தலைப்பில் பேசினார்.
Published on

புதுச்சேரி:

மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நூலகத் துறை சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.

 உலக புத்தக தினத்தை யொட்டி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவ நூல்கள் எனும் தலைப்பில் வினாடி வினா போட்டி மணக்குள விநாயகர் அறக்கட்டளை தலைவர் தனசேகரன் , துணைத் தலைவர் சுகுமாரன் , செயலாளர் நாராயணசாமி , மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது. நூலகர் இளங்கோவன் வரவேற்று பேசினார்.

மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன் , முதல்வர் டாக்டர் காக்னே மற்றும் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் ய பேசினார்கள்.

புதுவை பல்கலைக் கழக நூலகர் விஜயகுமார் மாணவர்களின் முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு என்னும் தலைப்பில் பேசினார்.

மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றி தழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசி ரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

லட்சுமி காந்தன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நூலகத்துறை சார்பில் துணை நூலகர் ஆனந்தன் மற்றும் நூலக ஊழியர்கள் செய்தி ருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com