ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, நலத்திட்ட உதவிகள்

வடக்கு மாநில அ.ம.மு.க. சார்பில் வழங்கப்பட்டதுஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா வழங்கிய காட்சி.
ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. இணை செயலாளர் லாவண்யா ஏற்பாட்டில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. உழவர்கரை தொகுதி கம்பன் நகர், மூலகுளம், உழவர்கரை ஆகிய இடங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், உழவர்கரை தொகுதி நிர்வாகிகள் அவைத் தலைவர் மீனன், லூர்துசாமி, கில்பர்ட், ரவி, விஜயன், அய்யனார், பாலு, சக்திவேல், சண்முகம், பிரவீன், மோகன், சபா, முத்துப்பாண்டி, பிரதாப், ஜெயமணி, வினோத், அன்பு, மகளிர் அணி சரளா, சுமதி, உஷா, உமா, அமலா, சந்திரா, ழில்பேர், சதீஷ் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com