புதுச்சேரி கடற்கரையில் அதிகாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுவையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.கரையில் நின்று செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து இளம் தம்பதியினர் மகிழ்ந்தனர்.
புதுச்சேரி கடற்கரையில் அதிகாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

புதுச்சேரி:

வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுவையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று இருள் விலகாத அதிகாலையிலேயே சூரிய உதயத்தை காண கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஆனால் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் கடலில் இறங்கி சிலர் குளித்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் ஆபத்தான கடல் பகுதி என்பதால் கடலில் குளிக்க தடை உள்ளதை சுட்டிகாட்டி சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தினார்கள். சூரிய உதயத்தை பார்க்க முடியவில்லை, கடலில் குளிக்கவும் அனுமதியில்லை என சுற்றுலா பயணிகள் கவலை அடைந்தனர். இருப்பினும் கரையில் நின்று செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து இளம் தம்பதியினர் மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com