எம்.ஐ.டி. கல்லூரி மாணவருக்கு பாராட்டு

நாடு முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் போட்டியிலும் எம்.ஐ.டி. கல்லூரி வென்று சாதனை படைத்தனர்.
தேசிய மென் பொருள் போட்டியில் முதல் பரிசு மாணவனுக்கு பாராட்டு விழா நடந்த காட்சி.
தேசிய மென் பொருள் போட்டியில் முதல் பரிசு மாணவனுக்கு பாராட்டு விழா நடந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

ஏ.எம்.சி.ஏ.டி.-எஸ்.எச்.எல். இணைந்து அகில இந்திய சிக்கல் தீர்க்கும் திட்ட வரைவு மென்பொருள் போட்டியை நடத்தியது. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெ க்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் தகவல் தொழில் நுட்ப துறை இறுதியாண்டு மாணவர் பிரவீன்குமார் கலந்து கொண்டு இறுதிப்போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று

கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவரை கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லூரி துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.

ஏற்கனவே 2021, 2022-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் போட்டியிலும் எம்.ஐ.டி. கல்லூரி வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com