ஐஸ் கட்டி, ஆணிகள் மீது அமர்ந்து யோகாசனம் செய்த மாணவிகள்

64 வகையான யோகாசனங்களை 2 மணி நேரம் செய்து அசத்தினர்கள்.மாணவ-மாணவிகள் செய்த யோகா நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
ஐஸ் கட்டி, ஆணிகள் மீது அமர்ந்து யோகாசனம் செய்த மாணவிகள்
Published on

புதுச்சேரி:

சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கடற்கரை சாலையில் யோகாவில் உலக சாதனை செய்தனர்.

நிகழ்ச்சியில் ஐஸ் கட்டி மீது அமர்ந்து சுமார் 2 மணி நேரம் யோகாசனம் செய்தல், ஆணியின் மீது படுத்து யோகாசனம் செய்தல், ரூபி க்யூப் செய்து கொண்டே யோகாசனம் செய்தல், பானையின் மீது படுத்து யோகாசனம் செய்தல், பந்துகள் மீது படுத்து யோகா சனம் என 64 வகையான யோகாசனங்களை 2 மணி நேரம் செய்து அசத்தினர்கள்.

நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் செய்த யோகா நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

மாணவர்களுக்கு நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும் வகையில் யோகா நிகழ்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு உலக சாதனை புரிய வேண்டும் என்பதற்காக ஆணிகள் மீதுப்படுத்தும் பந்துகள் பானைகள் மீது யோகா செய்தும் ஐஸ்கட்டிகள் மீது அமர்ந்து யோகா செய்து மாணவ- மாணவிகள் அசத்தினர்கள்.

மாணவர்கள் தங்களது மனதை ஒருநிலைப்படுத்தி நினைவு ஆற்றலை அதிகப்படுத்த இத்தகைய யோகா சனங்கள் உதவும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com