

புதுச்சேரி:
புதுவை அரசுத் துறையில் சூப்பரண்டாக பணியாற்றி புதுவை குடிமைப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற சாய்.இளங்கோவனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனராக பதவி வழங்கப்பட்டது.
இதையடுத்து தட்டா ஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இயக்குனராக பொறுப்பேற்ற சாய்.இளங்கோவன் முதல் நாளாக அலுவல் பணியை மேற்கொண்டார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் சில குறைபாடுகள் மற்றும் மாணவர்களின் கோரிக்கை தொடர்பான மனுவை விசாரித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். உடனே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி சென்ற இயக்குனர் சாய்.இளங்கோவன் விடுதியின் சமையலறையில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாணவர்களுக்கு சமைத்த உணவின் தரத்தை பார்வையிட்டார். மேலும் மாணவர்களோடு அமர்ந்து விடுதி உணவினை சாப்பிட்ட இயக்குனர் சாய். இளங்கோவன் மாண வர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து சேதம் அடைந்த விடுதியில் கட்டிடப் பகுதிகளை பார்வையிட்டார். அதே போல் விடுதியின் கழிவறை,குளியலறை, மாணவர்கள் படிக்கும் அறை, கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் உள்ள மாணவர்கள் தங்கும், உறங்கும் அறைகளை பார்வையிட்டு மாண வர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மாணவர்களின் பிரச்சனைகளை துறையின் அமைச்சருக்கு கொண்டு சென்று ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.