சாப்ட்வேர் என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை

தீபக் மாலை 5 மணி ஆகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த தீபக்கின் அண்ணன் ஆனந்த் மாடிக்கு சென்று கதவை தட்டினார்.தீபக்கின் அண்ணன் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை திருமுடி சேதுராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தே தீபக் வேலை செய்து வந்தார். இதற்கிடையே தீபக்கை திருமணம் செய்து கொள்ளும்படி அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்தனர்.

ஆனால் தீபக் தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தனது பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவரது பெற்றோர் அதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் அடிக்கடி தீபக்குக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து கொண்டே இருந்து வந்தது.

பின்னர் தீபக்கின் பெற்றோர் சமாதானம் அடைந்து அந்த பெண்ணையே திருமணம் செய்து தருவதாகவும் ஆனால் சில காலம் பொறுத்து கொள்ளும்படி தெரி வித்தினர்.

ஆனால் தீபக் தனது பெற்றோர் வெறும் வார்த்தையால் சொல்கி றார்கள் என்று தவறாக நினைத்து மன உளைச்சலுடன் இருந்து வந்தார். வழக்கம்போல் தீபக் நேற்று காலை வீட்டின் மாடி அறைக்கு சென்றார்.அவர் கம்பெனி வேலை செய்ய செல்கிறார் என்று பெற்றோர் நினைத்து கொண்டனர்.

ஆனால் தீபக் மாலை 5 மணி ஆகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த தீபக்கின் அண்ணன் ஆனந்த் மாடிக்கு சென்று கதவை தட்டினார்.

நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாததால் ஆனந்த் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தீபக் தனது வேட்டியால் மின்விசிறியில் தூக்கில் தொங்குவைதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீபக்கை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிேசாதித்த டாக்டர்கள் தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தீபக்கின் அண்ணன் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com