மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுவை சுசிலாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.அன்னை தெரசா மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கும் எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கிய காட்சி.
மாணவர்களுக்கும் எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை சுசிலாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி துணைமுதல்வர் சுகந்தி ராஜவேலு தலைமை தாங்கினார்.

புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் செல்வமுத்து மாணவர் முன்னேற்றத்திற்கு திறன் மேம்பாட்டு பற்றி விளக்கினார்.

பள்ளி துணை முதல்வர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை பற்றி விளக்கி கூறினார். அன்னை தெரசா மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

விழாவின் ஏற்பாடுகளை அன்னை தெரசா மக்கள் இயக்க நிர்வாகிகள் செல்வபாண்டியன், கிருஷ்ணவேணி, கம்சலை, பைரவி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை நன்றி கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com